கிள்ளான் விபத்து - கால்வாயில் தூக்கி வீசப்பட்ட ஆடவர்!

- Shan Siva
- 24 Feb, 2025
கிள்ளான், பிப் 24: ஜாலான் பத்து பெலாவில் ஒரு காருடன் மோதியதில்
மூன்று மீட்டர் நீளமுள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்ட 29 வயது மோட்டார் சைக்கிள்
ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இன்று காலை சுமார் 6.45
மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மோட்டார்
சைக்கிளோட்டிக்கு காலில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. தீயணைப்புத்துறையினர் அவரை
மீட்டதாக அவர் முக்தார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *