உணவகங்களில் புகைப்பிடித்தால் பொதுமக்களே புகைப்படம் எடுத்து புகார் அளிக்கலாம்!

top-news

பிப்ரவரி 16,

உணவகங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான உணவகங்களில் புகைப்பிடிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் நேரடியாகப் புகார் அளிக்கும் முறையை ஜொகூர் மாநிலத்தில் தொடங்கியிருப்பதாக ஜொகூர் மாநில சுகாதாரச் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon தெரிவித்தார். 

உணவகங்களில் புகைப்பிடிப்பவர்களைப் புகைப்படும் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் இனி பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என அவர் வலியுறுத்தினார். எடுக்கப்பட்ட காணொலிகளை அருகில் உள்ள சுகாதார அலுவலங்கள் அல்லது நகராட்சி அல்லது மாவட்டத்தில் இயங்கும் எந்தவோர் அரசு அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் அளித்தவரின் அடையாளங்கள் வெளியிடப்படாமல் காக்கப்படும் என்றும் Ling Tian Soon நம்பிக்கை அளித்தார்.

Johor memperkenalkan kaedah aduan awam bagi menguatkuasakan larangan merokok di restoran. Orang ramai dibenarkan mengambil gambar atau video perokok dan melaporkannya kepada pihak berkuasa. Tindakan akan diambil dalam 24 jam dan identiti pengadu dirahsiakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *