பூட்டிய காருக்குள் இறந்த கிடந்த முதியவர்!

- Shan Siva
- 05 Jan, 2025
கோத்த கினாபாலு: தாமான்
சினார் என்ற இடத்தில் பூட்டிய காருக்குள் 69 வயது முதியவர் மயங்கிய
நிலையில் காணப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர்
சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 10.03 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, லிண்டாஸ்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு காலை 10.11 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
சிறப்பு
உபகரணங்களைப் பயன்படுத்தி, குழு வெற்றிகரமாக வாகனத்தைத் திறந்தது.
இந்த வழக்கு
மேலதிக விசாரணைக்காக போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *