ஆன்லைன் மோசடியில் RM 20 லட்சத்தை இழந்த முதியவர்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, டிச 18: 70 வயதான துணிக்கடை உரிமையாளர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி 20 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

முன்னதாக அதிக வருமானம் தரும் வெளிநாட்டு நாணய முதலீட்டு திட்டத்தை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் குழுவில் அந்த நபர் சேர்க்கப்பட்டதாக ஜொகூர் காவல்துறை தலைவர் எம் குமார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் முதலீட்டைப் பற்றி மேலும் அறிய குழுவின் நிர்வாகியைத் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் சந்தேக நபரின் அறிவுறுத்தலின்படி நவம்பர் மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் அவர் பல வங்கிக் கணக்குகளுக்கு RM20 லட்சம் அளவுக்கு பல பரிவர்த்தனைகளை செய்துள்ளாதாகவும்  குமார் கூறினார்.

அவர் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து, தனது முதலீடுகளைக் கண்காணிக்க ஒரு கணக்கைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளார்.

பின்னர் தாம் செய்த முதலீட்டுக்கு  RM62 லட்சத்துக்கும் அதிகமான லாபத்தைக் காட்டியுள்ளது.  ஆனால், அவரால் பங்குகளை விற்கவோ அல்லது பெறப்பட்ட வருமானத்தை எடுத்துக்கொள்ளவோ முடியவில்லை என்று குமார் கூறினார்.

இதனை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த நபர் நேற்று பத்து பஹாட்  போலீசில் புகார் செய்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *