வழிப்பறி திருடனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 30: கடந்த அக்டோபர் மாதம் பங்சாரில் மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி திருடன் ஒருவனால் பாதிக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.

லிம் ஃபூங் மெய் எனும் 78 வயது மூதாட்டி இன்று காலமானதாக பங்சார் பார்க் குடியிருப்போர் சங்கத் தலைவர் நிதேஷ் மலானி தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஜாலான் லிமாவ் மானிஸில், அருகில் உள்ள கடைக்கு லிம் நடந்து சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அவரது கைப்பையை பறித்துச் சென்றதைக் காட்டியது, இதனால் அவர் சாலையில் விழுந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சில வழிப்போக்கர்கள் அவருக்கு உதவி செய்யும் வரை அவர் சாலையில் அசையாமல் கிடந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தலையில் கணிசமான இரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து 394 பிரிவின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *