மின்சார கட்டணம் 14% உயர்வா? – அன்வார் மறுப்பு

- Shan Siva
- 03 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 3: தீபகற்ப மலேசியாவில் ஜூலை மாதம் முதல் மின்சார கட்டணம் 14 சதவீதம் அதிகரிக்கும் என்ற கூற்றுக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
இருப்பினும்,
கட்டண உயர்வு இருக்கும் என்றும், ஆனால் சரியான விகிதம் மறுஆய்வுக்குப் பிறகுதான்
தீர்மானிக்கப்படும் என்றும் நிதியமைச்சராக இருக்கும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு திறன் மற்றும் விலை சரிசெய்தல் காரணமாக மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவு
அவசியம் என்று அவர் இன்று
சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் கூறினார்.
தற்போதைய
விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மதிப்பாய்வுகள்
நடத்தப்படுகின்றன. எனவே, இது
பொதுமக்களுக்கு சுமையாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை என
அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *