பீடோரில் 2.1 ஏக்கரில் மின்சுடலைமின்சுடலை!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

பீடோர், ஜன.29-

பத்தாங் பாடாங் மற்றும் தஞ்சோங் மாலிம் மாவட்டங்களில் மின்சுடலை கிடையாது. இன்றைய காலத்தில் இந்தியர்களுக்கு நவீன இயந்திர வசதி கொண்ட மின்சுடலை அவசியம் என சுங்காய் சட்டமன்றத்தின் மக்கள் சேவை மையத்தினால் உணரப்பட்டதாக இந்திய சமூக நல விவகாரத்தின் தலைவரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் தெரிவித்தார்.

அதன்படி, பீடோரில் அரசாங்க நிலத்தில் 2.1 ஏக்கர் பேரா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ சராணி முகமதுவின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆவணங்கள் பத்தாங் பாடாங் நில அலுவலகத்தில் இருக்கின்றன.

மின்சுடலைக்காக வழங்கப்பட்ட அந்த நிலம் சற்று பள்ளமாக உள்ளது. இந்நிலையில், அந்த குறிப்பிட்ட பள்ளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான மண்ணைக் கொண்டு நிரப்பும் பணியை பத்தாங் பாடாங் மாவட்ட அலுவலக அதிகாரி அகமது ரேதுடின் அகமது சுக்ரி ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.

தவிர அடுத்த கட்டமாக நில மேம்பாட்டிற்கு தேவையான நிதியை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். ஆக, இன்னும் 6 மாதக் காலத்தில் நிலத்தின் சீரமைப்பு பணி நிறைவு பெற்றுவிடும். அதன் பிறகு மின்சுடலை வசதி கொண்ட மயானமாக இவ்விடம் உருவெடுக்கும் போது, இந்திய சமூகத்தினர் இதன் பயனை பெற்றுக் கொள்ள முடியும் என சிவநேசன் உறுதி அளித்துள்ளார்.

கடந்த காலங்களில் தாப்பா.பீடோர், சுங்காய் மற்றும் சிலிம் ரிவர் தொகுதிகளின் இந்திய சமூகத்தினர் இறப்பு சம்பவம் ஏற்படும்போது தெலுக் இந்தான் இந்து சபாவின் மின்சுடலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பீடோர் நகரம் என்பது பெரிய வணிக மையமாகவும், விவசாய இடமாகவும் இருக்கின்ற காரணத்தினால் பேரா ஒற்றுமை அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை இங்கு கொண்டு வருகின்றது என்றார் சிவநேசன்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *