ஆடவரைத் தாக்கிய கும்பல் கைது! – காஜாங் காவல் துறை

- Sangeetha K Loganathan
- 17 Jan, 2025
ஜனவரி 17,
கடை வீதியில் ஆடவர் ஒருவரைக் கும்பல் ஒன்று தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட காணொலியின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள 4 ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் NAAZRON BIN MOHD YUSOF தெரிவித்தார்.
இது கடந்த 29 டிசம்பர் நிகழ்ந்த சம்பவம் என்றும் தற்போது காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆடவரைத் தாக்கிய குற்றத்திற்காக 32 முதல் 36 வயதுள்ள 4 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் மீது முன்னமே போதைப்பொருள் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் NAAZRON BIN MOHD YUSOF தெரிவித்தார்.
Polis Kajang menahan empat lelaki berumur 32 hingga 36 tahun selepas video tular menunjukkan seorang lelaki dipukul di Semenyih pada 29 Disember 2024. Tiga suspek memiliki rekod jenayah dan dadah. Siasatan sedang dijalankan, dan orang ramai diminta membantu memberikan maklumat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *