துப்பாக்கி முனையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஆடவர்!

top-news

ஜனவரி 18,

ஜொகூரில் உள்ள Taman Daya சாலையில் விபத்தை ஏற்படுத்தி தப்ப முயன்ற போதைப்பொருள் விற்பனையாளரான 39 வயது ஆடவரைக் காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சம்மந்தப்பட்ட ஆடவரின் வாகனத்தைப் பாசீர் குடாங்கிலிருந்து காவல் துறையினர் துரத்தி வந்த நிலையில் எதிரில் இருந்த 3 வாகனங்களை மோதியதால் சந்தேக நபர் வகனத்திலேயே சிக்கியதை அடுத்து அவரைக் கைது செய்ய காவல் துறையினர் துப்பாக்கியை எடுத்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 39 வயது ஆடவரிடமிருந்து 12 கிராம் syabu, 13 கிராம் heroin, 3 yaba மாத்திரைகள், 5 erimin மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மீது 16 போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

Seorang lelaki berusia 39 tahun ditahan di Taman Daya, Johor selepas cuba melarikan diri dari polis. Suspek terlibat dalam 16 kes dadah dan polis merampas heroin, syabu, pil yaba serta erimin dalam kenderaannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *