நீரில் மூழ்கி 24 வயது இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
மீரியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்து 24 வயது இளைஞரின் உடல் சடலமாக Miri ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது, மீரியில் உள்ள Pujut பாலத்திலிருந்து அவர் தவறி விழுந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் தேடுதல் பணியை மீட்புப் படை அதிகாரிகள் மேற்கொண்டதாகச் சரவாக் மீட்பு ஆணையம் தெரிவித்தது.
இன்று காலை 11 மணியளவில் அவரின் உடல் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் மிதந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 24 வயது Gelbires Gary Anyi Luhat என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்காகக் காவல் துறையிடம் அவர் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki, Gelbires Gary Anyi Luhat (24), ditemukan lemas pagi ini selepas terjatuh dari Jambatan Pujut 7, Miri. Mayat ditemui satu kilometer dari lokasi kejadian dan diserahkan kepada polis.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *