மனைவியைத் தாக்கிய வீடியோ வைரல்: உணவு விநியோகஸ்தர் நான்கு நாள் ரிமாண்ட்
- Surendran Sumdraraj
- 20 Mar, 2026
மலாக்கா, மார்ச் 20-
மலாக்காவில் மனைவியைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான உணவு விநியோகஸ்தர் ஒருவர், நான்கு நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான காணொளியில், குறித்த நபர் ஒரு பெண்ணை கடுமையாகத் தாக்குவதும், மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி அவளது தலையில் மோதுவதும் காணப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டுக்குரிய நபரைப் போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆயிர் கெரோ மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், மகிஸ்திரேட் உத்மான் அப்த் கானி, மார்ச் 20 முதல் 23 வரை நான்கு நாட்கள் ரிமாண்ட் உத்தரவை பிறப்பித்தார்.
இந்த ரிமாண்ட் விண்ணப்பத்தை மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவு (D11) சார்பில் சார்ஜன் சிதி நோர்ஹயாத்தி ஜைனான் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், 1994ஆம் ஆண்டு குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 18(A) கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



