பாராங்கத்தியால் காவல் அதிகாரிகளைத் தாக்கிய ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 16 Feb, 2025
பிப்ரவரி 16,
சுங்கை பட்டாணி தாமான் ஸ்ரீ அஸ்தானா குடியிருப்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட ஆடவரைக் கைது செய்யும் போது 4 காவல் அதிகாரிகளைச் சம்மந்தப்பட்ட ஆடவர் பாராங்கத்தியால் தாக்கியதாக நம்பப்படுகிறது. பிற்பகல் 3 மணியளவில் கோலா மூடா காவல் நிலையத்திற்கு ஓர் அவசர அழைப்புக் கிடைக்க பெற்ற நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வன்முறையில் ஈடுபட்ட ஆடவரைக் கைது செய்ய முயற்சிக்கும் போது 4 காவல் அதிகாரிகள் தாக்கப்பட்டதாகக் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்ட 32 வயது ஆடவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் காவல்துறையினர் அவரைத் தாக்கவில்லை என்றாலும் சம்மந்தப்பட்ட ஆடவரால் 4 காவல் அதிகாரிகளுக்குத் தோள்பட்டையிலும் தலையிலும் கத்தி வெட்டுக்காளானதாக அவர் தெரிவித்தார். காவல் அதிகாரிகளைத் தாக்கிய ஆடவர் தன்னையும் தாக்கிக் கொண்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்ததாகவும் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.
Seorang lelaki berusia 32 tahun menyerang empat anggota polis dengan parang ketika cuba ditahan di Taman Sri Astana, Sungai Petani. Suspek dipercayai mengalami gangguan mental. Suspek turut mencederakan pegawai di bahu dan kepala. Dia kemudian mencederakan dirinya sendiri dan meninggal dunia di hospital pada jam 1 pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *