பொதுக் கழிப்பறையில் பாலியல் சீண்டல்! ஆடவர் கைது!

top-news

டிசம்பர் 18,

பொதுக்கழிப்பறையில் இளம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 34 வயது ஆடவரைப் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பிடித்தனர். நேற்று மாலை 5.20 மணியளவில் Kluang காவல் நிலையத்திற்கு இது தொடர்பானப் புகார் அழைப்பு கிடைக்க பெற்றதால் சம்பவ இடத்திலேயே 34 வயது ஆடவரைக் கைது செய்ததாக Kluang மாவட்டக் காவல் ஆணையர்  Bahrin Mohd Noh தெரிவித்தார்.

குளுவாங்கில் உள்ள கம்போங் மெலாயுவில் உள்ள பொதுக் கழிப்பறையில் 34 வயது ஆடவர் மறைந்து இருந்ததாகவும் 24 வயது பெண் கழிப்பறைக்குள் நுழைந்ததும் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தால் இளம்பெண்ணின் கைகளில் கழுத்திலும் காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 34 வயது ஆடவர் மீது முன்னமே 3 போதைப்பொருள் வழக்குகளும் 6 குற்றவியல் வழக்குகள் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ள நிலையில் அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர்  Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Seorang lelaki berusia 34 tahun ditangkap setelah cuba mencabul seorang wanita di tandas awam di Kluang. Mangsa cedera ringan, dan suspek memiliki rekod jenayah dan dadah terdahulu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *