RM 38,727 மதிப்பிலானப் போதைப்பொருள் வைத்திருந்த ஐவர் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Feb, 2025
பிப்ரவரி 7,
ஜொகூரில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்துள்ளதாக தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB BIN SELAMAT தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் NITRAZEPAM வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் முன்னமே போதைப்பொருள் வழக்குகள் நிலுவையிய்ல் இருப்பதைக் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ECSTASY, SYABU, PIL YABA, ERIMIN, KETUM எனும் வகையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மதிப்பு RM 38,727 என்றும் கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB BIN SELAMAT தெரிவித்தார்.
Lima lelaki tempatan ditahan di Johor kerana memiliki dadah bernilai RM38,727. Polis mengesahkan tiga daripada mereka positif Nitrazepam manakala kesemua suspek mempunyai rekod jenayah berkaitan dadah. Antara dadah yang dirampas ialah ecstasy, syabu, pil yaba, erimin, dan ketum.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *