அடிக்கடி சோதனை நடவடிக்கையால் சட்டவிரோதக் குடியேறிகள் சரணடைய வேண்டும்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப்.21-

அமலாக்கத் தரப்பினர் கைது செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்கத் தலைநகரிலுள்ள சட்டவிரோதக் குடியேறிகள் உடனடியாகச் சரணடையும்படி அறிவுறுத்தப்படுகிறது.

அந்நியர்களின் இருப்பிட கூண்டாகத் தலைநகரைச் சுற்றியுள்ள சில இடங்களை கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை கண்டுபிடித்து விட்டதாக அதன் இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.தலைநகரில் சட்டவிரோதக் குடியேறிகள் பெரியளவில் குவிவதை முறியடிக்க அடிக்கடி அமலாக்க மற்றும் சோதனை நடவடிக்கைகளை கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகரிக்கும்.

உண்மையில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது சில இருப்பிடங்களைக் குடிநுழைவுத் துறை அடையாளம் கண்டு விட்டது. இதனைத் தொடர்ந்து குறுகிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதே சமயம் சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் முதலாளிமார்களை இலக்காய்க் கொண்ட பெரியளவிலான சோதனை நடவடிக்கையை குடிநுழைவுத் துறை அதிகரிக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

ஆகையால், கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம். காரணம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது வான் முகமட் சௌபி வான் யூசோப் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *