வெள்ளப் பேரிடரால் எல்லா அமைச்சர்களின் விடுமுறையும் ரத்து-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 30-

நாட்டில் வெள்ளப் பேரிடரைச் சமாளிக்கும் பொருட்டு அரசாங்கத்தின் அனைத்து வசதிகளும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய கூட்டரசு அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் ஆகிய அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.

மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரப் பணிகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்களின் பங்கேற்பும் அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார். அமைச்சர்களும் துணையமைச்சர்களும் தங்களின் கடமைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படியும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்லும்படியும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அன்வார் கூறினார்.

இதற்கு முன்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த அமைச்சர்களின் விடுமுறை விண்ணப்பங்கள் அனைத்தும் இப்போது மீட்கப்பட்டுள்ளது என்றும் அன்வார் உறுதிப்படுத்தினார்.மலேசியாவின் எட்டு மாநிலங்களை வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ள வேளையில், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் வெள்ள அகதிகளைப் பராமரிப்பதற்கும் கூட்டரசு பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்தை (பிகேஓபி) அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 80,589 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் 467 தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுவரை நால்வர் வெள்ளத்திற்குப் பலியாகி உள்ளனர். அச்சம்பவங்கள் கிளந்தான். திரெங்கானு, சரவாக் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன.

தற்போதைய அசாதாரண வானிலையின் காரணமாக இதுவரை கண்டிராத வகையில் கனத்த மழை பெய்யும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *