வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உணவகம்! - 8 லட்சம் இழப்பீடு கேட்டு உரிமையாளர் கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு: சுங்கை கிளந்தானில் உள்ள படகுப் பின்னணி கொண்ட உணவகம், வெள்ளத்தின் போது வலுவான நீரோட்டத்தால் பாதிகப்பட்டதால். RM800,000 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று  அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இழப்புகளில் ஹவுஸ்போட்டின் பாகங்கள், தளபாடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள், உறைவிப்பான் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த புதிதாக வாங்கிய கிங் கிராப் உள்ளிட்டவை, சம்பவத்தின் போது நீரில் மூழ்கின.

அன்றைய தினம் ஏராளமான முன்பதிவுகளைப் பெற்றதாகவும், ஆனால் வளாகத்தின் சேதங்களை சரிசெய்ய ஒரு வார கால இடைவெளி எடுத்துள்ளதால், அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டியிருந்தது என்றும் 40 வயதான முகமட் இஷான் ரம்லி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *