டத்தோ ஸ்ரீ சனுசி நோரின் அதிகாரப்பூர்வ இல்லத்தினுள் வெள்ளம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 1 -

அனாக் புக்கிட் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதால், அலோர்ஸ்டார், ஸ்ரீ மெந்தாலூனில் உள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோரின் அதிகாரப்பூர்வ இல்லத்தினுள் வெள்ளம் புகுந்தது.

வட மாநிலமான கெடாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருவதால், அனாக் புக்கிட் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி இருக்கிறது. வீட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் சனுசியும் அவரின் குடும்பத்தினரும் தொடர்ந்து வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த ஆறு சனுசியின் வீட்டின் பின்புறத்தில் இருக்கிறது. ஆற்றைக் கடந்த வெள்ளம் நேற்று அவரின் வீட்டு வளாகத்தைச் சூழ்ந்தது. அவர் வீட்டின் வரவேற்பு அறை. சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றினுள் வெள்ளம் புகுந்ததாகக் கூறப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *