கட்டுப்பாட்டை இழந்த லாரி! ஓட்டுநர் பலி!

top-news

பிப்ரவரி 15,

பின்துலூ சாலையில் பாலாக் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றிரவு 8.36 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகச் சரவாக் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் JAMRI BIN MASRAN தெரிவித்தார். விபத்தால் லாரியில் இருந்த மரக்கட்டைகள் அனைத்தும் சரிந்து லாரி ஓட்டுநர் மீது விழுந்ததால் லாரி ஓட்டுநர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் நசுங்கி இறந்ததாக அவர் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட லாரி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உயிரிழந்தவர் 44 வயதான Muhie Nawan என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 3 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் மரக்கட்டைகளிக்கிடையில் சிக்கியிருந்த 44 வயதான Muhie Nawan எனும் லாரி ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pemandu lori balak, Muhie Nawan, 44, maut selepas lori dipandunya terbabas di Jalan Empangan Murum, Belaga. Mangsa dihempap kayu balak yang dibawa. Operasi menyelamat oleh bomba mengambil masa lebih dua jam sebelum mayat diserahkan kepada pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *