நெடுஞ்சாலையில் லாரியை மோதிய பேருந்து! மூவர் படுகாயம்!

top-news

ஜனவரி 9

இன்று அதிகாலை ஜொகூர் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநரும் லாரி ஓட்டுநரும்  பயணி ஒருவரும் படுகாயம் அடைந்தனர். 

அதிகாலை 6.30 மணிக்கு விபத்து ஏற்பட்டதாகவும் பேருந்து ஓட்டுநரான 28 வயது இளைஞர், பேருந்தில் பயணித்த 70 வயது முதியவர், 34 வயது லாரி ஓட்டுநர் என மூவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் ஜொகூர் மாநில மீட்பு ஆணையத்தின் அதிகாரி Awang Ismail Hanapi தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kemalangan melibatkan bas dan lori di Lebuhraya Utara-Selatan arah Johor menyebabkan tiga cedera, termasuk pemandu bas, pemandu lori, dan penumpang warga emas. Polis sedang menyiasat punca kejadian yang berlaku awal pagi tadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *