குப்பை லாரி மோதியதில் 3 வீடுகள் சேதம்!

top-news

டிசம்பர் 18,

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி மோதியதில் 3 வீடுகள் சேதமடைந்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். காஜாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியான Taman Bukit Mewah பகுதியில் குப்பைகளைச் சேகரித்த குப்பை லாரியின் பிரேக் செயலிழந்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தின் போது குப்பை லாரியில் இருந்த ஓட்டுநர் உட்பட நான்கு துப்புரவுப் பணியாளர்களும் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாக காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.

இந்த விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்த நிலையில் வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தலைமையில் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரையும் துப்புரவு பணியாளரையும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah lori sampah hilang kawalan dan merempuh tiga buah rumah di Taman Bukit Mewah, Kajang. Tiada kecederaan dilaporkan, dan polis sedang menyiasat pemandu serta pekerja terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *