லாரி மோதியதில் 12 பேர் காயம்!

top-news

டிசம்பர் 27,

கட்டுப்பாட்டை இழந்த Tanker லாரி 4 வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்ததாக Segamat மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார். 

மாலை 3.15 மணியளவில் ஜொகூரிலிருந்து சிரம்பான் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழந்ததாக அவர் தெரிவித்தார். 

ஒரு Tanker லாரி , 1 கனரக லாரி 2 வாகனங்களில் பயணித்த 12 பேர் இந்த விபத்தில் காயமடைந்தாலும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். 

கட்டுப்பாட்டை இழந்த Tanker லாரி எதிர்திசையில் வந்த வாகனங்களை மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அவர் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்த 12 பேரும் Segamat மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Ahmad Zamry தெரிவித்தார்.

Sebuah lori tangki hilang kawalan lalu melanggar empat kenderaan di Segamat, menyebabkan 12 cedera. Tiada kematian dilaporkan, dan mangsa sedang dirawat di Hospital Segamat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *