Tanker லாரி கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம்!

top-news

ஜனவரி 7,

சாலையின் நடுவே செம்பனை எண்ணெயை ஏற்றி சென்ற Tanker லாரி 2 வாகனங்களை மோதி கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

கோலா சிலாங்கூரில் உள்ள Pasir Penambang முதன்மை சாலையில் நேற்று நண்பகல் 2.19 மணிக்கு லாரியும் இரு வாகனங்களும் விபத்துக்குள்ளானதாகப் பெறப்பட்ட அவசர அழைப்பிற்குப் பின் 8 மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். 

விபத்துக்குள்ளான Tanker லாரியில் தீ ஏற்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டாலும் விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேரையும் தீயணைப்பு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு, தீயைக் கட்டுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். 

விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருகிறது. 

Empat cedera dan tiga selamat dalam nahas melibatkan lori tangki, Toyota Alphard, dan Proton Saga yang terbakar di Pasir Penambang. Operasi JBPM Selangor dengan lapan anggota berjaya dikawal dalam masa 12 minit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *