பெந்தோங் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி! இருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 07 Jan, 2025
ஜனவரி 7,
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் BUKIT TINGGI பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்த TRELER லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். நேற்றிரவு 8.50 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாக BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் 39 வயதான Norazuat Mokhtar என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் உடன் இருந்த மற்றொருவர் யார் என்பதை விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட லாரி இரும்புகளைக் கோலாலம்பூரிலிருந்து குவாந்தானுக்குக் கொண்டு செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.
Lori membawa muatan besi terbalik di Bukit Tinggi, Bentong, mengorbankan dua nyawa, termasuk pemandu Norazuat Mokhtar. Identiti mangsa kedua masih disiasat. Kemalangan berlaku ketika dalam perjalanan dari Kuala Lumpur ke Kuantan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *