நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 23 Dec, 2024
டிசம்பர் 23,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த 5 டன் லாரி கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இன்று அதிகாலை 6.10 மணியளவில் 26 வயது லாரி ஓட்டுநர் செலுத்திய 5 டன் லாரி வடக்கு தெற்க்கு நெடுஞ்சாலையின் பீடோர் பகுதியில் கவிழ்ந்தது.
மாட்டுத் தீவனங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் தீவன மூட்டைகள் சரிந்து சாலையில் பிற வாகனங்கள் கடக்க முடியாதவாறு மறைத்ததால் பெரும் வாகன நெரிசலையும் உண்டாக்கியது. விபத்தில் பாதிக்கப்பட்ட 26 வயது லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடன் இருந்த 2 உதவியாளர்கள் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lori 5 tan terbalik di Lebuhraya Utara-Selatan menyebabkan pemandu cedera dan tersepit tangan. Muatan makanan lembu bertaburan di jalan, mencetuskan kesesakan lalu lintas. Dua pembantu terselamat dengan kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *