அமைச்சரவையில் உள்ளவர்களின் வாய் பூட்டப்பட்டுள்ளது! – மகாதீர்!

- Sangeetha K Loganathan
- 13 Dec, 2024
டிசம்பர் 13,
தாம் பிரதமராக இருந்த 2018 இல் என்னுடைய அமைச்சரவையில் உள்ளவர்களை மீறி நான் செயல்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். அதே போல அவர்களின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் நான் இருந்தது இல்லை என்றாலும், என்னுடைய பல செயல்பாடுகள் குறித்து அவர்கள் கருத்தையும் நான் கேட்டேன், அப்படி இருக்கும் போது, BATU PUTEH விவகாரம் தொடர்பாக அப்போது அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் ஒரு முடிவையே எடுத்தனர். அதுவே என் முடிவுமாக இருந்தது என முன்னாள் பிரதமர் மகாதீர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
Batu Puteh விவகாரத்தில் மிகவும் துள்ளியமான முடிவுகள் எடுக்கபடவேண்டிய சூழல் ஏற்பட்ட போது அமைச்சரவையில் நான் எந்தவொரு கருத்தையும் முன்மொழியவில்லை என்றும், எடுக்கப்படும் முடிவுகளால் நாம் எதிர்நோக்கவிருக்கும் சிக்கல்களையும் கலந்தாலோசனை செய்து அதன் பின்னரே முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சரவையில் முடிவானதும், அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டதாகவும் மகாதீர் தெரிவித்தார்.
Tun Dr. Mahathir Mohamad menegaskan keputusan isu Batu Puteh pada 2018 dibuat secara kolektif oleh kabinet ketika beliau menjadi Perdana Menteri, tanpa tindakan melangkaui pandangan menteri kabinet.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *