அரசியல் கட்சிகள் போதும்! – மகாதீர் ஆலோசனை!

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
மலேசியாவில் இருக்கும் பல அரசியல் கட்சிகளால் எந்தவொரு பயனமில்லை என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். பல கட்சிகளால் வாக்குகள் சிதறி, பிளவுகள் மட்டுமே மிஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த கட்சியிலிருந்து அந்த கட்சிக்கும், அந்த கட்சியிலிருந்து இந்த கட்சிக்குமாகத் தலைவர்கள் தாவுவதும், இரண்டும் இல்லாமல் புதிதாகக் கட்சியைத் தொடங்குவது என இது எல்லாம் பிளவுகள் என மகாதீர் தெரிவித்தார்.
கடந்த 15 ஆவது பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லாமல் தலை தொங்கிய நிலை ஏற்பட்டது. கட்சி உறுப்பினர்களின் தலை மட்டும் தொங்கவில்லை, நாடே அவமானப்பட்டது என அவர் தெரிவித்தார்.
அமேரிக்கா, இங்லாந்து நாடுகளில் இரண்டே கட்சிகள் அரசியலில் உள்ளன. அது போல மலேசியாவிலும் இரு கட்சிக் கொள்கை அமைந்தால் மலேசியா தப்பிக்கும் என மகாதீர் தெரிவித்தார்.
Mantan Perdana Menteri Tun Mahathir mencadangkan Malaysia hanya memerlukan dua parti politik. Beliau berkata, banyak parti menyebabkan pecahan undi dan ketidakseimbangan dalam politik negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *