மலேசியா ஏர்லைன்ஸ் MH21 விமானம் கோளாறு காரணமாக பாரிசுக்குத் திரும்பியது
- Tamil Malar (Reporter)
- 08 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 8-
நேற்று பாரிஸ் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்திலிருந்து (CDG) கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு (KUL) சென்ற MH21 என்ற Airbus A350 விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திரும்பி பாரிசில் பத்திரமாக தரையிறங்கியது.
மலேசியா ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் காட்டியில் ஏற்பட்ட அசாதாரண நிலை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி திரும்ப முடிவு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
விமானம் CDG விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விமான பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ் இயக்கும் Airbus A350 விமானங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



