குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2:

விரைவு உணவகத்தின் முன்னாள் வாகனத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டதோடு, வாகனத்தின் முன் பக்க பகுதியைப் பெயர்த்து ஒருவரைக் கொல்ல முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஆடவர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 வயதான வான் அசார் அஸ்மான் என்ற அந்த நபரின் கொலை முயற்சிக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கார் திருடியதற்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி இஸ்ரலிசம் சானுசி தீர்ப்பளித்தார்.

டி ஜோசுவா ஜெயசீலன் என்பவர் தனது ஹோண்டா சிவிக் காரை வான் அசாரின் காதலிக்கு அக்டோபர் 22 அன்று வாடகைக்கு கொடுத்தார், அவர் அதை மறுநாள் திருப்பித் தர வேண்டும். ஆனால் காரைத் திருப்பித் தராததால், ஜிபிஎஸ் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓட்டிச் சென்ற காரைக் கண்டுபிடித்தார் இதனை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *