கடல்சார் பாதுகாப்பு ஆணையம் RM1.5 Bilion மதிப்பிலானக் கடத்தலை முறியடித்துள்ளது!

top-news

ஜனவரி 4,

கடல்சார் பாதுகாப்பு ஆணையமான Agensi Penguatkuasaan Maritim Malaysia (APMM) கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் நடத்திய சோதனையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு RM1.5 Bilion என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். 

கடல்வழியாகச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதையும் வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தி கொண்டு வரப்படும் பொருள்களைத் துணிச்சலாகப் பறிமுதல் செய்த Maritim மலேசியா படையினருக்கு முக்கிய பங்களிப்புள்ளதாக அவர் தெரிவித்தார். 

வெளிநாட்டு மீனவர்களிடமிருந்து RM85 மில்லியன், கடத்தல் டீசல் RM1.3 மில்லியன், RM983,500 மதிப்பிலான மருந்துகள், RM660,401 மதிப்பிலான மானிய விலை பொருள்கள், RM215,277 மதிப்பிலானப் பெட்ரோல், RM129,000 மதிப்பிலான KETUM, RM16,520 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் என முக்கிய கடத்தல்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் முறியடித்துள்ளது.

Agensi Penguatkuasaan Maritim Malaysia (APMM) menyelamatkan harta bernilai lebih RM1.5 bilion pada 2024. Rampasan termasuk nelayan asing, diesel, dadah, barangan terkawal, petrol, ketum, rokok, dan rampasan lain bernilai RM2.6 juta, menurut Datuk Seri Saifuddin Nasution Ismail.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *