ஜப்பானில் பயங்கர காட்டுத் தீ: பாதுகாப்பு கருதி 2,500 பேர் வெளியேற்றம்
- Surendran Sumdraraj
- 25 Apr, 2026
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இவாத்தே மாகாணத்தின் ஒட்சுச்சி (Otsuchi) பகுதியில் தீ வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத் தீ கடந்த சில நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் தொடங்கி, தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே பரவியுள்ளது. தீ பரவலைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஜப்பான் சுயபாதுகாப்பு படையினர் இணைந்து தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கணக்கான ஹெக்டேயர் காடுகள் தீக்கிரையாகி, சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி வெளியேற்ற நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



