மாட்டின் மீது மோதிய பெண் பலி! – BATU PAHAT

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
பத்து பஹாட்டிலிருந்து பெசாராய் செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 47 வயது பெண் பலியானார். Sultanah Nora Ismail மருத்துவமனையில் பாதுகாவலராகப் பணியாற்றும் Dewiana Marpok எனும் பெண் தனது மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மாட்டின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரவு 7.45 மணியளவில் பத்த் பஹாட்டிலிருந்து பெசராய் செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகப் பத்த பஹாட் மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார். விபத்துக்குக் காரணமான மாட்டின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் விபத்தில் பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.
Seorang pengawal keselamatan, Dewiana Marpok, 47, maut selepas motosikalnya merempuh lembu di Jalan Bypass, Batu Pahat. Insiden berlaku ketika perjalanan pulang dari kerja. Ahli keluarga kesal lembu berkeliaran tanpa kawalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *