ஆற்றில் விழுந்த இளைஞர்! 6 நாள்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 12 Feb, 2025
பிப்ரவரி 12,
நண்பர்களுடன் ரவுப் BATU TALAM ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது காணாமல் போன 22 வயது இளைஞர் 6 நாள்கள் தொடர் தேடுதலுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Wan Ahmad Fadillah Wan Abdul தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 23 வயது Ahmad Khairul Nizam எனும் இளைஞர் திடீரெனக் காணாமல் போனதை அறிந்த நண்பர்கள் காவல்துறைக்கும் மீட்பு ஆணையத்திற்கும் புகார் அளித்த நிலையில் தொடர்ந்து 6 நாள்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்ததாகவும் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அவரின் உடல் மணலில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய இயக்குநர் Wan Ahmad Fadillah Wan Abdul தெரிவித்தார்.
Mayat Ahmad Khairul Nizam, 22, yang hilang selepas dihanyutkan arus Sungai Lipis akhirnya ditemui tertimbus di dasar sungai selepas enam hari pencarian. Operasi pencarian dijalankan secara berterusan oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *