பாதுகாப்பான, நிலையான இணைய சேவை- தொடர்பு பல்லூடகச் சட்டத்தில் திருத்தம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச.10-

1998ஆம் ஆண்டு தொடர்பு ,பல்லூடகச் சட்டத்தில் திருத்தம், அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான இணைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெடோபிலியா எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் சம்பவம், சிறுவர்களை உட்படுத்திய ஆபாச காணொளிகள், பாலியல் அச்சுறுத்தல், இணையத்தில் மேற்கொள்ளப்படும் மோசடி, பகடிவதை மற்றும் சூதாட்டங்கள் போன்ற இணைய அச்சுறுத்தல்களிலிருந்து நாடு விடுபடுவதை உறுதி செய்வதற்காக, இச்சட்டத் திருத்தம் செய்யப்படுவதாக தொடர்பு அமைச்சர் பாஹ்மி ஃபாட்சில் தெளிவுபடுத்தினார்.

"நிலையான இந்த சட்ட கட்டமைப்பு, இணையத்தில் வழக்கமான குற்றங்கள் இடம்பெறுவதை நிவர்த்தி செய்யும். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தால் ஆதிக்கம் செலுத்தும் இணைய சூழலை இனி நாங்கள் பார்க்க விரும்பவில்லை. மிகவும் மோசமாக உள்ளது. இது மலேசிய மக்களின் அடையாளத்திற்கும் ஒழுக்கத்திற்கும் முற்றிலும் முரண்பட்டுள்ளது”, என்று அவர் கூறினார்.

மக்களவையில் 2024-ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்ட மசோதாவை இரண்டாம் வாசிப்பிற்கு தாக்கல் செய்தபோது அவர் அதனை கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *