PN புதிய தலைவர் நியமனம் தொடர்பான குழப்பம் ரமலானில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் தீர்வு
- Tamil Malar (Reporter)
- 06 Feb, 2026
கோத்தா பாரு, பிப். 6-
பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக உருவான குழப்பம், ரமலான் மாதத்தில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PN துணை பொதுச் செயலாளர் டத்தோக் ஸ்ரீ தகியுதீன் ஹாசன் கூறுகையில், PN சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும், MT கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக விவாதித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
“நான் முன்பே கூறியது போல, PN முடிவு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களும் அமைப்புச் சட்டத்தின்படி மற்றும் MT கூட்டத்தின் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை மீறி எந்த முடிவும் எடுக்க முடியாது,” என அவர் கூறினார்.
தற்போது நிலவும் தலைமை நியமன குழப்பம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் ரமலான் காலத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் தீர்க்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“அந்த கூட்டத்தில் எல்லா விஷயங்களும் தெளிவுபடுத்தப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் தற்போதைய குழப்பம் முடிவுக்கு வரும்,” என தகியுதீன் ஹாசன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



