பூச்சோங்கில் 58 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 Feb, 2025
பிப்ரவரி 6,
பூச்சோங்கில் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 58 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். Bandar Puchong பகுதியில் உள்ள பிரபல உணவு வளாகத்தில் வேலை செய்து வந்த 102 வெளிநாட்டினர்கள் சோதனையை மேற்கொண்டதில் ஆவணங்களின்றி சட்டவிரோதமாக வேலை செய்து வந்த மியான்மாரைச் சேர்ந்த 31 ஆண்களும் 10 பெண்களும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 ஆண்கள் ஒரு பெண், 9 Bangladesh ஆண்கள், இந்தியாவைச் சேர்ந்த 4 ஆண்கள், வியாட்னாமைச் சேர்ந்த ஓர் ஆண் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட உணவு வளாகங்களில் வேலை செய்து வந்ததாகவும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான உரிமத்தைக் கொண்டிருக்காமல் வேலை செய்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்குற்பட்டவர் என்றும் மேலதிக விசாரணைக்காக அவர்கள் தடுபத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Seramai 58 warga asing ditahan dalam serbuan Jabatan Imigresen di sebuah pusat makanan di Bandar Puchong. Mereka terdiri daripada warga Myanmar, Indonesia, Bangladesh, India dan Vietnam yang bekerja secara haram tanpa dokumen sah. Semua tahanan berusia antara 18 hingga 40 tahun dan sedang disiasat lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *