இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் மித்ரா
.jpg)
- M.ASAITHAMBY -
- 22 Dec, 2024
2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ தரவுகளின் படி மலேசியாவில் 426,173 குடும்பங்கள் ( Ketua Isi Rumah-KIR) வறுமைக் குறியீட்டின் கீழ் உள்ளதாக அறியப்படுகின்றது.அவற்றில் 319,960 குடும்பத்தினர் ஏழைகளாகவும்,106,173 குடும்பங்கள் பரம ஏழைகளாகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். மொத்த ஏழைகளின் எண்ணிக்கையில் இந்தியர்களின் தொகை 20,577 குடும்பங்கள் என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசியம் அனைவருக்கும் உள்ளது.
கடந்த காலங்களில் இந்திய சமூகத்தில் சூழ்ந்திருக்கும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் ஏழ்மை நிலயைப் போக்கும் இலக்கு முழுமையான பலனைத் தரவில்லை என்பதைக் காண முடிகின்றது.மலேசிய இந்தியர்கள் குறிப்பாக பி 40 தரப்பினரிடையே காணப்படும் சமூகப் பொருளாதார பின்னடைவுகளுக்கு நிவாரணம் என்ற இலக்குடன் உருவாக்கம் கண்ட செடிக் தற்போது மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு “மித்ரா” என பல்வேறு செயலாக்கங்களை
முன்னெடுத்து வருவதை அனைவரும் அறிவோம்.
மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் சவால்கள்
நீண்டகாலமாக மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார இடைவெளி,தேசிய நீரோட்ட வளர்ச்சியில் பின்தங்கிய சூழல், ஒருங்கிணைக்கப்பட்ட நீண்ட கால வியூகத்
திட்டங்களின் செயலாக்கமின்மை,அரசாங்கத்தின் ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கைகளில் விடுபடுதல், மற்றும் மாற்று சிந்தனையற்ற பொருளாதார ஈடுபாடு ஆகியவை தற்போது பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
*வீட்டுடைமைப் பிரச்சினைகள்
*அடிப்படை மற்றும் உயர்கல்வியில் பிந்தங்குதல்
*இளைஞர்களின் சமூகப் பிரச்சினைகள்
*குடும்ப உறவுகளில் சிக்கல்கள்
*பொருளாதாரச் சிக்கல்கள்
*வேலை வாய்ப்பின்மை
*வர்தகத் துறையில் நாட்டமின்மை
*முதியோர் வாழ்வியல் சிரமங்கள்
*நிவாரணமற்ற நோய்களின் தாக்கங்கள்
*தனித்து வாழும் பெண்களின் அவலங்கள்
போன்ற இந்தியர்களின் வாழ்வியல் சவால்கள் சரியான முறையில் தீர்வு கணப்பட வேண்டும்
என்பதே மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்பு என்பதை யாருமே மறுக்க முடியாது.
“மித்ரா” வின் சமூகக் கடப்பாடுகள்
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு எனப்படும் மித்ரா தற்போது பிரதமர் துறை அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது.மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோ ஸ்ரீ
அன்வார் இப்ராஹீம் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோலாலம்பூர்,பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் அவர்களை மித்ரா வின் தலைவராக நியமனம்
செய்தார். மித்ரா சரியான தடத்தில்,வெளிப்படையாகவும்,சிறந்த நிர்வாக அணுகுமுறையுடன் செயல் படும் நோக்கத்தில் அரசாங்க நிர்வாகப் பிரிவு அதிகாரியான பிரபாகரன் கணபதி அவர்களை மித்ராவின் தலைமை இயகுநராக நியமனம் செய்யப்பட்டார்.
*மனித மூலதன மேம்பாடு
*சமூக நலன் மேம்பாடு
*தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பு
*சுய அடையாளம் மற்றும் நெறிமுறை மேம்பாடு
*ஆகிய உள்ளடக்கத் துறைகளில் பிந்தங்கியுள்ள இந்தியர்களுக்கு நிரந்திரத் தீர்வே மித்ராவின்
*முதன்மை இலக்கு என்பதை தலைமை இயக்குநர் நாடு தழுவிய நிலயில் நடைபெற்று முடிந்த
*கலந்துரையாடலின் போது தெளிவு படுத்தி இருந்தது கவனிக்கத் தக்கது ஆகும்.
2024-ல் மித்ராவின் உருமாற்ற செயல் பாடுகள்
புதிய தலைமை இயக்குநரின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா பல்வேறு செயல்பாடுகளின் மூலம் செயலாக்கத் திட்டங்களை வரையறுத்து பிரதமர் துறை அலுவலகத்தின் அனுமதியைப் பெற்று அரசாங்கம் மற்றும் தனியார் நிருவனங்களின் வழி பி 40 மற்றும் எம் 40 தரப்பினரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
*சீனா மலேசியா தொழில் திறன் பரிமாற்று வியூகத் திட்டம்-500 திறன் பயிற்சி மாணவர்கள்.
*தேசிய தொழில் முனைவு மையத்தின் இந்தியர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் – 600 பங்கேற்பாளர்கள்
*மார்டி மேலாண்மை நிருவனத்தின் விவசாய உருமாற்றுத் திட்டம் – 100 பங்கேற்பாளர்கள்
*இந்திய பாலர் பள்ளிகளுக்கான மானியம் – 4709 மாணவர்கள்
*உயர் கல்வி மாணவர்களுக்கான உதவி தொகை – 12400 மாணவர்கள்
*நீரிழிவு நோயாளிகளுக்கான மருத்துவ உதவி மானியம் -600 பேர்
*தேசிய சமூக நல அறவாரியத்தின் அவசரகால உதவி மானியம் – 14331 பேர்
*மலேசிய இணைய பாதுகாப்பு மன்றத்தின் ஆரம்ப இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிகள் – 80000 மாணவர்கள்
*அனைத்துலக இணைய தர நிர்ணய மையத்தின் இணைய பாதுகாப்பு சிறப்புச் சான்றிதழ் வேலை வாய்ப்புடன் – 200 பேர்
*மலேசியப் பங்குச் சந்தை வாரியத்தின் பொருளாதார மேம்பாட்டு வியூக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு – 5000 பேர்
2024 ஆம் ஆண்டிற்கான அனைத்து திட்டங்களும் கட்டம் கட்டமாக செயலாக்கம் செய்யப்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மித்ராவின் 2025 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பமும் வியூக இலக்குகளும் 2025 மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார உருமாற்று நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் மானிய விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தகுதி வாய்ந்த இயக்கங்கள்,நிருவனங்கள் 2.12.2024 ஆம் நாள் தொடங்கி எதிர்வரும் 5.1.2025 ஆம் நாள் வரை மித்ராவின் அதிகாரப் பூர்வ அகப்பக்கத்தின் வழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
“Think Big, Beyond with Sustainability” எனும் பேராற்றல் சிந்தனை, தொலை இலக்கு மற்றும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட திட்டங்கள், மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கு மாபெரும் பங்களிக்கும் வகையிலான பரிந்துரைகள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை மித்ரா தெளிவு படுத்தியுள்ளது. “நமது சமூகம் நமது பொறுப்பு” எனும் கடப்பாட்டில் அனைவரும் கைகோர்த்து 2025 ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருக்கும் மலேசிய
இந்திய சமூகத்திற்கு புதிய விடியலை உருவாக்க உறுதி கொள்வோம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *