ஆண்டுக் கூட்டம் நடத்தாத மணி மன்றங்களை அங்கீகரிக்கமாட்டோம்! மணிமன்றத் தேசியத் தலைவர் முருகன்!

- Thina S
- 23 Feb, 2025
பிப்ரவரி 23,
நாடளாவிய நிலையில் இருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றங்கள் ஆண்டுக் கூட்டத்தைக் கட்டாயம் நடத்த வேண்டும் என தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம் வலியுறுத்தினார்.
ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் 31 ஆம் நாளுக்குள் மன்றங்கள் ஆண்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் தேசியத்திலிருந்து பொறுப்பாளர்கள் மன்றங்களின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுக் கூட்டத்தை நடத்த 14 நாள்களுக்கு முன்னமே கூட்டத்திற்கான நோட்டிஸ் வழங்க வேண்டும் என்பதையும் தேசியத் தலைவர் வலியுறுத்தினார். பல மன்றங்களின் ஆண்டுச் சந்தா கட்டணத்தை மாநிலத் தலைவர்கள் செலுத்துவதாகவும் மன்றத் தலைவர்கள் தேசியத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *