பொது மன்னிப்பு – பேரரசரின் உத்தரவை ஏற்று நடப்பீர்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஜன 4:  குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையைக்‌ குறைப்பது பற்றிய பேரரசரின்‌ உத்தரவைச்‌ சம்பந்தப்பட்ட தரப்பினர்‌ புரிந்துகொள்வதோடு அதனை ஏற்று நடக்கவும்‌ வேண்டும்‌ என்று பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரரசரின்‌ உத்‌தரவைப் படியுங்கள்‌, புரிந்து கொள்ளுங்கள்‌, அதனை ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்று லெஸ்தாரி நியாகா மடானி சந்தைப்‌ பகுதிக்கு நேற்று வருகை புரிந்த வேளையில்‌ செய்தியாளர்களிடம்‌ அன்வார்‌ குறிப்பிட்டார்‌. இஸ்தானா நெகாராவினால்‌ நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை பற்றி கருத்துரைத்தபோது அன்வார்‌ இதனைத் தெரிவித்தார்‌.

கூட்டரசுப் பிரதேசங்களான கோலாலமபூர், புத்ராஜெயா, லாபுவான்‌ ஆகியவற்றில்‌ குற்றமிழைக்கும்‌ நபர்களை மன்னிப்பதற்கும்‌, அவர்களின்‌  தண்டனையைத்‌ தள்ளிவைப்பதற்கும்‌, குறைப்பதற்கும்‌ பேரரசருக்கு விசேஷ அதிகாரம்‌ உள்ளது என்று முன்னதாக இஸ்தானா நெகாரா வெளியிட்டிருந்த அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டிருந்தது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *