நஜிப் சார்பில் சாட்சியமளிக்க அம்னோ அமைச்சர்கள் தயார்!

- Muthu Kumar
- 12 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 12-
தமக்கு விதிக்கப்பட்டுள்ள எஞ்சிய சிறை தண்டனையை வீட்டுக் காவலில் இருந்தவாறு கழிப்பது தொடர்பிலான முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் முயற்சியில், அவர் சார்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தனது அமைச்சர்கள் தயாராக இருப்பதாக அம்னோ கூறியுள்ளது.
"கேட்டுக் கொள்ளப்பட்டால், உயர் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள் தயாராக இருக்கின்றனர்” என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்ராப் வஜ்டி டுசுக்கி, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவில் நடந்த அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களில் நஜிப்பின் விவகாரமும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் வெளியிட்டிருந்த அரச உத்தரவுக்கு ஏற்ப, வீட்டுக் காவலின் கீழ் தாம் வைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் சீராய்வு மனுவை செய்வதற்கான அனுமதியை மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்து நஜிப் கடந்த 6ஆம் தேதி பெற்றிருந்தார்.மன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு பின்னர் இஸ்தானா நெகாராவினால் வீட்டுக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில், நஜிப்புக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பட்சியின்று. அஸ்ராப் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.. எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்புக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கும் சிறை தண்டனைக்கும் முழு மன்னிப்பு வழங்கக் கோரி, மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் முறையீடு செய்யப்படும் என்று, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *