நின்றுக் கொண்டிருந்த லாரியில் மோதி 21 வயது இளைஞர் பலி!

top-news

பிப்ரவரி 8,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் மோதிய 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாக REMBAU மாவட்டக் காவல் ஆணையர் Shaik Abd Kadar Shaik தெரிவித்தார். 

நேற்றிரவு 8.45 மணியளவில் பழுதடைந்த லாரியை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தியதாக 27 வயது லாரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்ததாகவும் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang penunggang motosikal berusia 21 tahun maut selepas merempuh belakang lori yang berhenti di lorong kecemasan di Lebuhraya Utara-Selatan. Polis menyatakan lori itu sudah meletakkan papan amaran namun motosikal tersebut hilang kawalan sebelum kemalangan berlaku.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *