வெளிநாட்டினர்கள் நடத்தி வந்த 9 வணிகக் கடைகளை மூடிய MPKS!

- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
கோலா சிலாங்கூர் பகுதிகளில் வெளிநாட்டினர்களால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த வணிகத் தலங்களைக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் சோதனை நடத்தி மூடியது. கோலா சிலாங்கூரில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டினர்கள் வணிகத்தலங்களை ஆக்கிரமித்து வணிகம் செய்து வருவதாகப் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் காலை 10 மணி முதல் 2 மணிவரையில் சோதனைகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் கீழ் உள்ள வணிகக் கடைகளில் சோதனையிட்டதில் 9 வணிகக் கடைகளை மூடியதாகவும் 11 சம்மன்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் வணிகத்தலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உள்ளூர்வாசிகளின் உரிமத்தைக் கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் வணிகம் செய்து வருவதாகவும் சோதனையில் தெரிய வந்ததாகக் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
Majlis Perbandaran Kuala Selangor (MPKS) menutup sembilan premis perniagaan yang dikendalikan secara haram oleh warga asing dalam operasi berikutan aduan awam. Sebanyak 11 saman turut dikeluarkan dan siasatan lanjut dijalankan terhadap mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *