தமிழ், சமயப் பணிகளுக்கு பேருதவியாக இருந்து வரும் ஓம்ஸ் தியாகராஜன்!

- Muthu Kumar
- 16 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 16-
சுங்கைபூலோ துவான் மீ தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், திருக்குட நன்னீராட்டு விழா ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 1,500க்கும் மேற்பட்ட பக்தப்பெருமக்கள் கலந்து கொண்டனர். தோட்டத்தில் வேலை செய்து அதன் பின்னர் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட பொதுமக்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்பாளைத் தரிசித்தனர்.
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆலயங்களுக்கும் பெருமனதுடன் தன்னால் இயன்ற பேருதவிகளைச் செய்து வரும் ஓம்ஸ் தியாகராஜன்,துவான் மீ தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கும் ஆதரவு வழங்கியுள்ளதாக ஆலயத் தலைவர் சுவாமிநாதன் செல்வதாஸ் கூறினார்.
இந்நாட்டில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஓம்ஸ் தியாகராஜன் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தி தமிழுக்கு மகுடம் சூட்டியதோடு தமிழர்களுக்கும் ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவராவார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *