மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் மூடா – அமிரா ஆயிஷா

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14-

பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்வைப்பதே மூடா கட்சியின் தற்போதைய நோக்கமாக இருப்பதாக அதன் இடைக்காலத் தலைவர் அமிரா ஆயிஷாஅப்துல் அசீஸ் தெரிவித்தார். 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் குழப்பமாக இருப்பதாகவும், குறிப்பாக வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலை (PRU16) எதிர்கொள்ள எந்தக் கட்சிகள் யாருடன் இணைகின்றன என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.

“இப்போது அரசியல் நிலைமை மிகவும் குலைந்துள்ளது. யார் யாருடன் இருக்கிறார்கள் என்பது கூட தெளிவாக தெரியவில்லை. ஆனால் மூடாவின் நோக்கம் மிகவும் எளிது – நாம் மக்களுடன் சேர்ந்து நிற்க விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

சாலைப் போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள், பிரச்சாரங்கள், மாநில சட்டமன்றம் (DUN) மற்றும் பாராளுமன்றம் போன்ற அனைத்து தளங்களிலும் மக்களின் குரலை எடுத்துச் செல்லும் பணியை மூடா தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *