எனக்கு யார் மீதும் வெறுப்பில்லை! அவர்களைக் கடந்து போகிறேன்! – NAJIB உருக்கம்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 13,

எனக்கு யார் மீதும் கோபமில்லை என முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak உருக்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மலேசிய அரசியலில் Tun Razak மகனாக மட்டும் நான் இல்லை. மக்களில் ஒருவராக வாழ்ந்துள்ளேன். இப்போதும் அதனை மறவாமல் இருக்கிறேன். என் அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக என் மீது குற்றங்கள் இருக்கும் நிலையில் என்னை நான் நிரூபிக்க நினைக்கிறேன்.

ஏதேதோ வழக்கு என ஒன்றன் பின் ஒன்றாக என் மீது வழக்குகள் சுமத்தப்பட்டு வருகிறது. அதனால் எனக்கு யார் மீதும் கோபமும் வெறுப்புமில்லை. என்னுடன் இருந்தவர்களும் எனக்கு எதிராக இருந்தவர்களும் எனக்கு துரோகம் செய்ததற்காக நான் அவர்களைப் பழிவாங்கவும் நினைக்கமாட்டேன். அவர்களிடமிருந்து கடந்து செல்ல மட்டுமே நான் எண்ணுகிறேன்.

1 Malaysia Development Berhad எனும் 1MDB திட்டம் என்னுடைய கனவு திட்டம் என நினைத்து நான் தொடங்கவில்லை. மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாகத் தொடங்கப்பட்ட முதலீடு திட்டம் அது. அதுவரையில் மலேசியாவின் பல நாடுகள் முதலீடு செய்வதை அறிந்த நாம், மலேசியாவுக்கு எனும் சொந்த முதலீடு இதுவரையிலும் இல்லை. அதனை முதன் முதலாகத் தொடங்கியது தான் 1Malaysia Development Berhad எனும் 1MDB. இது மலேசியாவின் கனவு திட்டம்.

மலேசியாவின் கனவு திட்டத்தை நானே சிதைக்க நினைத்திருக்கமாட்டேன். இப்போதும் என்மீதானக் குற்றச்சாட்டு 1 MDB நிதியிலிருந்து  RM2.3 பில்லியன் நிதியை நான் லஞ்சமாகப் பெற்றதாகவும் 21 பணமோசடி வழக்குகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. 1 MDB திட்டத்திற்காக உலக நாடுகளின் நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற பாடுபடும் ஒருவர் அதே நிதியை லஞ்சமாகப் பெற வாய்ப்புள்ளதா? அப்படி வாய்ப்பு இருந்தால் 1 MDB எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் மலேசியாவில் நேரடியாக முதலீடு செய்ய உலக நாடுகளை வலியுறுத்தியிருக்கலாமே என முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak உருக்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak வாக்குமூலத்தைப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் மீண்டும் அவரின் வாக்குமூலத்தைப் பெற அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் நிர்ணயிக்கப்படுதாக உத்தரவிட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *