நான் மலேசியாவை விற்கவில்லை! முதலீடுகளைக் கொண்டு வந்தேன்! நஜீப் விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
மலேசியாவில் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டுமே பல நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தியதாக முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் இன்று உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்தின் RM2.3 பில்லியன் மோசடி குறித்தான விசாரணையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைத் தாம் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியதையும் அவர் மறுத்தார். கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கிய தன்னுடைய அரசியல் பயணத்தில் இதுவரை அரசு பணத்தைச் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியதில்லை என நஜீப் தெரிவித்தார்.
நஜீப் மீதானப் பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் 678 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களையும் வாக்குமூலங்களை இன்று உயர்நீதிமன்றத்திடம் வழங்கினார்.
Bekas Perdana Menteri Najib Razak menjelaskan di Mahkamah Tinggi bahawa pertemuannya dengan pelbagai syarikat asing bertujuan menarik pelaburan ke Malaysia bukan untuk keuntungan peribadi. Beliau menafikan tuduhan menyalahgunakan dana kerajaan dalam kes 1MDB.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *