பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 25: ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக மகளிர்  குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க பல ஆண்கள் இன்னும் முன்வரவில்லை என்றாலும், சமீப ஆண்டுகளில் ஆண்களுக்கு எதிரான வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

அண்மைய பாலியல் வன்முறைக்கு எதிரான அமைச்சின் ஆலோசனைத் திட்டத்தைத் தொடர்ந்து ஆண்கள் சம்பந்தப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல ஆண்கள் வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்ய தயங்குவதாக நான்சி கூறினார்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *