இந்தோனேசியர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்... வெளிப்படையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு!

- Shan Siva
- 01 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 1: கடந்த வாரம் மலேசிய கடல்சார் அதிகாரிகளால் ஐந்து இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுடப்பட்டது மற்றும் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வெளிப்படையாக விசாரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.
இந்த சம்பவம்
குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை இந்தோனேசியாவின் தூதரகம் மூலம் சமர்ப்பிக்க
உத்தரவிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
முழு
விசாரணைகளும் முடிந்ததும், (அறிக்கை)
இந்தோனேசியாவில் உள்ள நமது நண்பர்களாலும் ஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சினையால்
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில்
கவனமாக இருப்பதாக அவர் கூறினார்.
நாட்டின்
நீர்நிலைகளில் குடியேறிகளின் சட்டவிரோத நுழைவு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை
அமலாக்க அதிகாரிகள் சட்டப்பூர்வமாகக் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குற்றவாளிகளுக்கு
எதிராக அவர்கள் சட்டத்தை மீற முடியாது என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *