விரைவுப்படகுகள் மூலம் கள்ளத்தனமாக நாட்டுக்குள் நுழையும் இந்தோனேசியர்கள்!

top-news
FREE WEBSITE AD

கோத்தாபாரு, பிப். 3-

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக விரைவுப் படகுகள் மூலம் இந்தோனேசியர்கள் நுழைகின்றனர். அதன் தொடர்பாகப் போலீசார் நடத்திவரும் விசாரணைக்கு குடிநுழைவுத்துறை உதவி செய்யும் என்று அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷபான் தெரிவித்தார்.

இதர எல்லைக் கட்டுப்பாட்டு முகமைகளுக்கும் இத்தகைய ஒத்துழைப்பை குடிநுழைவுத்துறையினர் வழங்குவார்கள் என்று அவர் கூறினார்.சட்டவிரோத நுழைவாயில்கள் வழியாக நாட்டுக்குள் நுழையும் சம்பவத்தைக் கண்காணிப்பது போலீஸ் மற்றும் மலேசிய கடலியல் அமலாக்கத்துறை போன்ற முகமைகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாகும். ஆயினும், எல்லைப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்த முகமைகளுடன் குடிநுழைவுத்துறை ஒத்துழைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கு வருகை புரிய விரும்பும் சுற்றுப்பயணிகள் சட்டப்பூர்வமான நுழைவாயில்களைப் பயன்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தோனேசியர்களை மலேசியாவுக்கு விரைவுப்படகுகள் மூலம் சட்டவிரோதமாக கொண்டுவரப்படுவதைக் காட்டும் காணொளிகள் அண்மையில் வெளியாகின.

அதனைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்று நேற்று முன்தினம் இணையத்தளப் பத்திரிகையொன்று தெரிவித்திருந்தது.சுராபாயா, லொம்போக், தஞ்சோங் பாலாய் ஆகிய இடங்களிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டுவர தலா 1,600 வெள்ளி முதல் 2,900 வெள்ளி வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.ஜொகூர், கிளந்தான், போர்ட் கிள்ளான் உள்ளிட்ட சிலாங்கூரின் சில பகுதிகளுக்கு இந்தோனேசியர்கள் கொண்டுவரப்படுகின்றனர் என்றும் நேற்றுமுன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *