இந்தோனேசியர்கள் சுடப்பட்ட விவகாரம்... போதைப்பொருள் - துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணையாக மாற வாய்ப்புள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 3: ஜனவரி 24 ஆம் தேதி மலேசிய கடல்சார் அதிகாரிகளால் ஐந்து இந்தோனேசியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான காவல்துறை விசாரணை, போதைப்பொருள் அல்லது துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணையாக மாற வாய்ப்புள்ளது என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சம்பந்தப்பட்ட அந்த இந்தோனேசியர்கள் அனைவரும் ஆவணமற்றவர்கள் என்று அவர் கூறினார்.

புலம்பெயர்ந்தோரை கடத்துவதில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

MMEA துரத்திய படகிலும் அவருக்கு தொடர்பு இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 இந்த விசாரணைகள் இன்னும் ஆரம்பக் கட்டங்களில் உள்ளன, மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் தொடர்கிறது என்று அவர் கூறினார்.

1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட MMEA பணியாளர்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சைஃபுதீன் தெரிவித்தார்.

பந்திங் காவல் நிலையம் இனி விசாரணையைக் கையாளது என்று குறிப்பிட்ட அவர், இது மிகவும் தீவிரமான விசாரணைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், , அதை புக்கிட் அமான் விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

சம்பவத்தில் காயமடைந்த நான்கு இந்தோனேசியர்கள் இன்னும் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சைஃபுதீன் கூறினார்.

கொலை முயற்சி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக ஆயுதச் சட்டம் 1960 இன் பிரிவு 39, அதிகாரிகளை அவர்களின் கடமைகளின் போது தடுத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கடத்துவதற்கு எதிரான சட்டம் 2007 இன் பிரிவு 26a ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *